சைவசமயத் தலையாய நூல்கள் - திருமுறை மெய்கண்ட சாத்திரம் போற்றுதும் அருள்விழா

21-06- 2024ஆம் நாள்  ''சைவசமயத் தலையாய நூல்கள் - திருமுறை மெய்கண்ட சாத்திரம் போற்றுதும் அருள்விழா'' பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மண்டபத்தில், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  சபையின் ஏற்பாட்டில், கொழும்பு வலய அறநெறிப் பாடசாலை மாணவர்களை இணைத்து, பேரூராதீன 25ஆம் குருமகாசந்நிதானப் பெருமானார் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் எழுந்தருளோடு இனிதே நடத்தப்பெற்றது.  இவ்விழாவின்பொருட்டு, கொழும்பு வலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, பரிசில்களும் சான்றிதழ்களும் குருமகாசந்நிதானம் பெருமானாரின் திருக்கரங்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அனுசரணை வழங்கியிருந்ததோடு, கொழும்பில் உள்ள பல்வேறு சைவ அமைப்புக்களுடன் இலங்கை சைவநெறிக் கழகமும் உடனிணைந்து பங்களிப்புச் செய்திருந்தது. 











































































































































































































































































































































Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்

சுத்தசைவம் நூல் யானை ஊர்வலமும் அறிமுகவிழாவும்