Posts

Showing posts with the label 2022

சைவம் பேணுவாம் 2022-சிவகீதை நூல் அறிமுகவிழாவும் சிவநெறி அரங்கும்

Image
தமிழ்நாட்டில் சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சிவகீதை நூலினை இலங்கையில் அறிமுகம் செய்துவைக்கும் விழாவாகவும், சைவ விழிப்புணர்ச்சிச் சொற்பொழிவுகள் அடங்கிய சிவநெறி அரங்கு விழாவாகவும் சைவம் பேணுவோம் விழா, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 20 – 12 – 2022ஆம் நாளன்று இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டது. சைவசமயத்திலும் கீதை என்னும் நூல் உண்டு என்பது குறித்த விழிப்புணர்வையும், ஏராளமான கீதைகள் உள்ளன என்பதனையும் சைவத்தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும் என்பதன்பொருட்டுத் தமிழ்நாட்டில் இருந்து, சிவகீதை நூல் இலங்கைக்குப் பெறப்பட்டு, அறிமுகவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. தென்னாடு ஐம்பூதநாதர் திருக்கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாட்டில் இணைந்து பங்கேற்றுப் பேருதவி புரிந்தனர். தமிழ்நாட்டுத் தருமைபுர ஆதீனத் தம்பிரான் தவத்திரு மீனாட்சி சுந்தரம் தம்பிரான் சுவாமிகள் இவ்விழாவிற்கு எழுந்தருளியிருந்தார். சைவத்திருமதி சித்தாந்தரத்தினம் செ.உதயகௌரி அவர்கள் சபையை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். குமாரவயலூர் திருமுறைக்கலாநிதி முனைவர் திருஞான பாலச்சந்...

அம்பாறை வளத்தாப்பிட்டியில் சமயதீக்கை வழங்குதல்

Image
  2022 – 03 – 17ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடன் இணைந்து இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தின் பங்களிப்புடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சைவசமயதீக்கை வழங்கும் கிரியைகளினைச் சிவாகமவிதிப்படிச் சிறப்புடனே ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் 124 பேர் சைவசமயதீக்கை பெற்றுக்கொண்டனர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இல்லங்களில் சிவபூசை செய்வது எவ்வாறென்று விளங்கிய அச்சுப்பிரதி நூல்களும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாவலர் பெருமான் எழுதிய நித்திய கரும விதி நூலும் வழங்கப்பட்டன. இலங்கை சைவநெறிக் கழகத் தலைவரும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபைப் பொதுச்செயலாளருமான மரு.சிவத்திரு.கி.பிரதாபன் ஈசான தேசிகர் சைவ அனுட்டானத்தினையும் இல்லங்களில் எளிமையாகச்செய்யக்கூடிய அன்புமார்க்க சிவபூசையினையும் தீக்கை பெற்றுக்கொண்டோருக்கு செய்துகாட்டிப் பயிற்றுவித்தார். கல்முனை சிவநெறி அறப்பணி மன்றத்தின் தலைவர் சிவத்திரு.யோ.கஜேந்த...

சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு ”சைவமாமணி” விருது

Image
கொழும்பு 13 ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாணத் திருவிழாப் பெருநாளில்(23-05-2022), திருக்கோயிலின் அறங்காவலர் சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனார் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, வழிபட வருகைதந்திருந்த கனடாவாழ் சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் ”சைவமாமணி” விருது வழங்கிப் பாராட்டியது. கனடாவில் இலங்கை சைவமக்களிடையே சைவசமயப் போதனைகளினை நன்றே முன்னெடுத்துவருதல் பொருட்டும், இலங்கையில் அவருடைய சொந்த மண்ணிலும் ஏனைய இடங்களிலும் பல்வேறு சைவசமய அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திவருதல் பொருட்டும் இலங்கை சைவநெறிக் கழகம் இவ்விருதினை சிவாச்சாரியப்பெருமகனாருக்கு வழங்கிப் பாராட்டும் பேறுடைத்தது.

யாக்கை அறக்கட்டளைக்கு நிதிதிரட்டி வழங்குதல்

Image
  தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளினை ஆவணப்படுத்தும் தனியார் அறக்கட்டளையான ”யாக்கை தொண்டு அறக்கட்டளை” அமைப்பு வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, புலம்பெயர் தேசத்தில் உள்ள சைவ மக்களிடம் விண்ணபித்துப் பெற்றுக்கொண்ட நிதித்தொகையினை (இந்தியப் பெறுமதி 30,400/=) யாக்கை அறக்கட்டளைக்கு வழங்கி, இலங்கை சைவத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளுக்கு பக்கபலமாக விளங்கும் வரலாற்றுப்பாலத்தினை இலங்கை சைவநெறிக் கழகம் வெளிப்படுத்திக்கொண்டது.

மேற்படிப்புக்குரிய பரீட்சை நிதியினை வழங்கி உதவுதல்

Image
அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவனுக்கு மேற்படிப்புக்குரிய பரீட்சை எழுதுவதற்குரிய நிதியினை, 21-06-2022ம் நாள் விண்ணப்பித்து வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக,  இலங்கை சைவநெறிக் கழகம் வழங்கியிருந்தது.