அகரம் சைவப் பொதுப்பணி மன்றம் தொடக்கவிழாவில் இலங்கைச் சைவநெறிக் கழகம்
அகரம் சைவப் பொதுப்பணி மன்றம் என்னும் பெயரில் வத்தளையில் சைவத்தமிழர் ஒன்றுகூடித் தோற்றுவித்து, தோற்றுவிப்பு விழாவையும் பொங்கல்விழாவையும் ஒருங்கே வத்தளைப் பொது மண்டபத்தில் நடத்தியபோது, இலங்கைச் சைவநெறிக் கழகம் சைவப்பெருஞ்சமயத்தின் தனித்துவ மரபைச் சிறப்புடன் உணர்த்திவரும் உயர் கழகம் என்னும் வகையில், வத்தளை அகரம் சைவப் பொதுப்பணி மன்றத்தால் தோற்றுவிப்பு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டனர். இதன்பொருட்டு, இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் அவர்கள் 28-01-2024நாளன்று நடைபெற்ற அகரம் சைவப் பொதுப்பணி மன்றத்தின் தொடக்கவிழாவாக அமையப்பெற்ற பொங்கல்விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு முதன்மையுரை நிகழ்த்தினார்.







Comments
Post a Comment