யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத்துறை இணையவழியில்
19-02- 2024 ஆம் நாள் நடத்திய ''கந்தபுராணத்தில் சைவசித்தாந்தம்'' என்னும் இணையவழிக் கருத்தரங்கில் இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் கருத்துரையாற்றினார்.
சிவபூசை இருவகைப்படும். ஒன்று ஆன்மார்த்த சிவபூசை. மற்றையது பரார்த்த சிவபூசை. ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் தானே, தன்பொருட்டுச் செய்துகொள்வதாகும். பரார்த்த சிவபூசை என்பது நாட்டின் நலன்பொருட்டும் உலகத்தார் நலன்பொருட்டும் செய்யும் பூசையாகும். ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் செய்துகொள்ளவேண்டியவொன்றாகும். இது இருவகைப்படும். ஒன்று சிவாகமவழி விசேடத் தீக்கைகளுடன் செய்துகொள்ளும் ஆன்மார்த்த சிவபூசை. இப்பூசை சிறப்பு ஆன்மார்த்த சிவபூசை என்று போற்றுதற்குரியது. மற்றையது, அன்புமார்க்கமாய்ச் செய்யும் சிவபூசையாகும். இது பொது ஆன்மார்த்த சிவபூசை என்று பாராட்டுக்குரியது. எறும்பு, யானை, சிலந்தி, ஈ, காகம், குரங்கு என்று சிவபெருமானை இவ்வகையிற் வழிபட்டு உய்வடைந்த சைவப்புராணச்செய்திகள் ஏராளம். இவ்வாறு, விலங்குகளே பூசைசெய்து சிவபெருமானின் அருளைப் பெற்றுய்ந்துள்ளபோது, பிறத்தற்கரிய மானிடப்பிறவியிற் அடைதற்கரிய அரும்பேறாகிய சைவசமயத்தினைச் சார்ந்த சைவமக்கள், சிவபூசையினைக் கைக்கொள்ளாவிட்டால், எடுத்த பிறப்பை வீணாக்கியதாகவே முடிய...
சைவப்பெருஞ்சமயத்தில் சுமார்த்தமதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசுத்தங்களினை இனங்கண்டு நீக்கி, சைவப்பெருஞ்சமயத்தினை சுத்தநெறியாகத் தாபிக்கும் திருநூல் என்பதுவே, சுத்தசைவம் நூலின் சிறப்பாகும். தமிழ்நாடு புனிதர் பேரவைச் சைவக்கோமகனார் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனாரால் எழுதப்பட்ட சுத்தசைவம் நூலினை முழுமையாகப் படித்து இன்புற்ற சைவப்பெரியார் சிவபாலகணேசன் பெருமகனார் அடியேனிடம் ''நூலாசிரியரினை யானைமேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுவருதலே எம் கடனாகும்'' என்று உள்ளம் கசிந்துருகக் கூறினார். தம் நூல்கள் முதலிய பல சைவ நூல்களுக்கும் பொருள் விளக்கம் கொள்வதற்கு இந்நூலே உறுதுணை என்பதினை இந்நூலினைப் படித்தபிறகு நம்பால் அவர் அருளிச்செய்த இன்ப வார்த்தைகளாகும். சுத்தசைவம் என்பது சைவத்தினுள் சுமார்த்தமத ஏகாதிபத்தியத்தினால் ஏற்படுத்தப்பட்ட அசுத்தங்களினை நீக்கியருளும் நூல் என்பதினை நன்றே தெளிந்துகொண்ட அப்பெருமகனார், இந்நூல் அச்சாவதற்குரிய பெரும்நிதி தேவைப்படுவதனால், நூல் அச்சாவது தாமதமாகிவருகின்றது என்பதனை இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் வாயிலாக, அறிந்துகொண்டார். சைவப்பெரியார் ந.சிவபாலகணேசன்...
Comments
Post a Comment