நாவலர்பெருமான் குருபூசை -2023
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் இலங்கை சைவநெறிக் கழகம்,ஈழத்து திருநெறித் தமிழ் மன்றம், இந்து வித்தியா விருத்தி சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நாவலர்பெருமான் குருபூசை 04 - 12 - 2023ஆம் நாள் கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. பாடசாலை மாணவர், சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர் முதலியோரின் பங்களிப்புடன் இக்குருபூசை இனிதே நடைபெற்றது. இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவரும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டில் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment