நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம்,அகில இலங்கை இந்து மாமன்றம், இந்து வித்தியா விருத்தி சங்கம், ஈழத்து திருநெறித் தமிழ் மன்றம் என்பன இணைந்து ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.
இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும் 
 ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். 














Comments

Popular posts from this blog

சிவபூசை - நூல்களும் காணொளிகளும்

சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2017

மெய்கண்ட சாத்திர நூல் களஞ்சியம்